ஊரடங்கு முடிந்து தமிழ்நாடு அரசு ஒழுங்கான தனிமனித இடைவெளி, மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தே வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
அரசின் அறிவிப்பிற்கு பிறகு கடை, வணிக வளாகம் மற்றும் பேருந்துகள் இயங்க அரம்பித்தன, இந்நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும் அறிவித்திருந்தன.
ஆனால் அரசு பேருந்துகளில் சரியான தனிமனித இடைவெளியைப்பற்றி கவலைப்படாமலும் மற்றும் முகக்கவசம் அணியாமலும் மக்கள் பயணம் செய்கின்றனர், இதனை ஒட்டுநர்களும் நடத்துநர்களும் கண்டு கொள்வதில்லை, இது அரசின் அறிவுறுத்தாலா?, அல்லது நடத்துநர் மற்றும் ஒட்டுநர்களின் கவனக் குறைவா? என்று சமூக நல ஆர்வலர்கள் கேட்கின்றனர்.