தஞ்சை முன்பட்ட குறுவை அறுவடையில் உழவர்கள் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாகவே உள்ளன என்று உழவர்கள் எண்ணுவதால், அவர்கள் மேலும் அதிக நெல் கொள்முதல் நிலையங்களை கோரி வருகின்றனர். இந்த கொரணா காலத்தில், இந்தியாவில் மற்ற எல்லாத் துறைகளும் எதிர் முனை-(-Ve) வளர்ச்சியில் உள்ள போது, வேளாண்மை மட்டுமே மூன்று சதவீதத்திற்கு மேல் நேர்முனை(+ve) வளர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.